4 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சிலாபத்தைச் சேர்ந்த குடும்பமே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.