சற்று முன்
Home / செய்திகள் / சீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்

சீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்

யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு 7.45 மணியளவில் எரிவாயு சிலிண்டரை திருடிச் சென்றவர் சீ.சீ.ரி.வி கமராவில் அகப்பட்டுக்கொண்டார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிந்த எரிவாயு சிலிண்டர் நேற்று திருட்டுப்போயிருந்தது. உடனடியாக செயலில் இறங்கிய வர்த்தகர் சீ.சீ.ரி.வி கமரா ஊடாக பார்த்தபோது இரவு 7.45 மணியளவில் கடையின் முன் நின்ற ஒருவர் எரிவாயு சிலிண்டரை களவாடிச் சென்றமை தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

(படம்- நன்றி தயாளன்)

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com