சற்று முன்
Home / செய்திகள் / கைதடியில் பறிபோன கதிரைகள் !

கைதடியில் பறிபோன கதிரைகள் !

வடக்கு மாகாண புதிய அமைச்சரவை முழுமையாக பொறுப்பேற்ற நிலையில் புதிய வரிசைப்படி கதிரை ஒழுங்குகள் மாற்றப்பட்டுள்ளன. கைதடியிலலுள்ள மாகாணசபை கட்டடத்தில் இன்று (24) 103 ஆவது அமர்வு நடைபெற்றது. அதன்போது புதிய அமைச்சர்கள் முதலமைச்சருக்கு அருகாக கதிரையில் அமர்ந்திருக்க முன்னைய அமைச்சர்களது கதிரையிடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
பதவியினை விட்டு விலக மாட்டேனென முரண்டுபிடித்த முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் இன்று எதிர்வரிசைக்கு சென்றிருந்தார். முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கடைசி வரிசைக்கு சென்றிருந்தார். அதேபோல முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோரும் எதிர்க்கட்சி வரிசையின் முதலாவது நிரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com