சற்று முன்
Home / செய்திகள் / மட்டக்களப்பில் ஆலய மண்டபம் இடிந்து விழுந்தது – 30 பேர் படுகாயம்!

மட்டக்களப்பில் ஆலய மண்டபம் இடிந்து விழுந்தது – 30 பேர் படுகாயம்!

மட்டக்களப்பு, ஆரையம்பதியில் ஆலயம் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருந்த கட்டடம் இன்று மாலை இடிந்து விழுந்தில், 30 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்றது. ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்து ஸ்ரீ முத்துமாரியம்மன கோயிலின் மண்டப கட்டடப்பணிகள் நிறைவடைந்து அதற்காக கொங்க்ரீட் தளம் இடும் பணிகளின் போதே கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆறு பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அல்மேரா தெரிவித்தார். காயமடைந்த இன்னும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் பணிகள் இடம்பெறுகின்றன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com