சற்று முன்
Home / செய்திகள் / விடுதலைப் புலிகளின் அழிவிற்காக காத்திருந்தாரா சம்பந்தன் – சர்ச்சை உரை

விடுதலைப் புலிகளின் அழிவிற்காக காத்திருந்தாரா சம்பந்தன் – சர்ச்சை உரை

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் நிகழ்த்திய உரை அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவிற்காக காத்திருந்தாரா என்ற சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்றது. அதன் போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சிறிலங்கா அரசாங்ககத்தை நோக்கி குறிப்பிடும்போது,

விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும், அழித்தால், அரசியல் தீர்வை வழங்குவோம் என்ற வாக்குறுதியை மறந்துவிட்டீர்கள் போல் தெரிகின்றது. அதனை மறக்கப் பார்க்கின்றீர்கள் போல் தெரிகின்றது. அதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்ற சாரப்பட உரையாற்றியிருந்தார்.

அவரது இந்த உரை அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவிற்காக காத்திருந்தாரா தமிழ் மக்கள் மத்தியில் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளை அழித்தபின் அரசியல் தீர்வு தருகின்றோம் என சிறிலங்கத அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதாகவும் விடுதலைப் புலிகளை அழித்த பின்பும் ஏன் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அரசாங்கத்தை கேட்பதாக அவரது உரை அமைந்திருந்தது.

அவர் அங்கு மேலும் குறிப்பிட்டபோது,

ஆயுதமேந்தி போராடினால்தான் அரசியல் தீா்வு விடயத்தில் ஆக்கபூா்வமான கருமங்கள் நடக்கும் என்றால் அது குறித்தும் தமிழா்கள் சிந்திக்கவேண்டிய தேவை உள்ளது.

தமிழீழ விடுதலை புலிகள் இருந்தபோது பல கருமங்கள் நடைபெற்றன. ஆனால் இன்று அவ்வாறி ல்லை. எனவே ஆயுதங்கள் இல்லைதானே என கருமங்களை தாமதிக்கலாம் என கருதுவது தவ றான நிலைப்பாடு எனவும் அவா் கூறியிருக்கின்றாா்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமாக பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். தந்தை செல்வா கட்சியை ஆரம்பித்து ஏறத்தாழ 70 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம்.

சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். இன்னும் இறுதியானதும், உறுதியுமான முடிவு ஏற்படவில்லை. இந்த நாட்டில், இரண்டாம் தரப் பிரஜைகளாக, அடிமைகளாக வாழ வேண்டிய அவசியமில்லை.

தற்போது வடக்கு மாகாணத்தில் பல குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றி அமைக்கக்கூடிய வகையில், பல்வேறு வழிகளில் பல கருமங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனாலேயே அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்காமல், இருக்கின்றார்கள் போல எமக்குத் தெரிகின்றது.இவைகள் பாரதூரமான விடயங்கள், இவற்றை அனுமதிக்க முடியாது. இவற்றிற்கு மிக விரைவில் முடிவு காணுவோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பல கருமங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர், புதிய அரசாங்கத்தின் கீழ், புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதென்று தீர்மானிக்கப்பட்டு,

அந்த தீர்மானத்தின் அடிப்படையில், நாடாளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றி அமைக்கப்பட்டு, பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.எனினும் ஆயுதம் ஏந்தியவர்கள், எமக்காக பேச முடியாத சூழ்நிலையில்,

இன்று அவற்றைப் பயன்படுத்தி தாமதப்படுத்துவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது. ஆயுதம் ஏந்திப் போராடினால், தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள் என்றால்,

ஆயுதப் பலம் இல்லாவிடின் அதை கைவிடுவோம் என நீங்கள் இருப்பீர்களானால், அது ஒரு தவறான நிலைப்பாடாகும். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதை நாங்கள் பரிசீலிப்போம்.

யுத்தம் நடைபெற்ற போது, அரசாங்கம், சர்வதேச சமூகத்திற்கு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் பிரச்சினைகளை தீர்ப்போம் என வாக்குறுதியைக் கொடுத்தார்கள். அவ்விதமான வாக்குறுதிகளின் அடிப்படையில்,

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்தேசமும், இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வழிகளில் உதவினார்கள். அதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டார்கள். இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமல் செய்யப்பட்டதன் பின்னர்,

வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன. அவற்றை நிறைவேற்றக் கூடிய நிலைமை இருப்பதாக தெரியவில்லை. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியது.

எமது பிரச்சினை தீர்க்கப்படாமல், நீண்ட காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தததன் காரணமாகவே. 40 வருடங்களாக எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். சர்வதேச ஒப்பந்தங்கள் செய்தார்கள்.

பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், பிரச்சினை தீரவில்லை. அதற்கு மாறாக தமிழ் மக்கள் மீது, அட்டூழியங்கள், பலாத்காரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்தச் சூழ்நிலையில் தான், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும், அழித்தால், அரசியல் தீர்வை வழங்குவோம் என்ற வாக்குறுதியை மறந்துவிட்டீர்கள் போல் தெரிகின்றது. அதனை மறக்கப் பார்க்கின்றீர்கள் போல் தெரிகின்றது. அதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தக் கருமங்களை நிறைவேற்றக்கூடியவாறு, திட்டங்களை தீட்டி செயற்பட வேண்டிய நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com