வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
விண்ணப்பதாரிகள்www.np.gov.lk என்ற இணையத்தளத்தில் Recruitment and Exam என்ற பகுதியில் Advertisment என்ற பிரிவுக்குள் சென்று மேலதிக தகவல்களையும் மாதிரி விண்ணப்பத்தையும் பெறமுடியும்.
விண்ணப்பமுடிவுத்திகதி 2017.08.04 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடங்களும் அவற்றுக்கான வெற்றிடங்களும் வருமாறு-
தமிழ்-61, வரலாறு-40, குடியியல்-39, தகவல் தொழில் நுட்பம்-27, விவசாயமும் உணவுத் தொழில்நுட்பமும் – 57, வழிகாட்டலும் ஆலோசனையும் – 47, இரண்டாம் மொழி (சிங்களம்) – 78. (அ)