சற்று முன்
Home / செய்திகள் / ரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்

ரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது தடவையாகவும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமர் பதவியேற்றதையடுத்து, 16.12.2018 அன்று அட்டனில் இதனை மகிழ்விக்கும் முகமாக ஆராவாரம் செய்யப்பட்டது.


இதன்போது நகரில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அணைவரும் மகிழ்ச்சியடைந்ததோடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள்.


இந்த நிகழ்வின் போது, அட்டன் டிக்கோயா நகர சபையின் உப தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், நகரவாசிகள் என பலரும் ஆரவாரத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது அட்டன் நகரத்தில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com