சற்று முன்
Home / செய்திகள் / யாழ் முஸ்லிம் குடியிருப்பு பகுதியில் நட்சத்திர விடுதி – நடந்தது என்ன?

யாழ் முஸ்லிம் குடியிருப்பு பகுதியில் நட்சத்திர விடுதி – நடந்தது என்ன?

யாழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று அமைக்கப்படுவதைக் கண்டித்து முஸ்லிம் மக்கள் நேற்று(12) சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் புதிய சோனகத்தெரு கிராம சேவகர் பிரிவு ஜே87 முஸ்லிம் கல்லுரி வீதி ஜின்னா வீதி மற்றும் ஹலீமா ஒழுங்கை ஆகியவற்றை இணைக்கும் பிரதேசத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று அமைக்க முன்னாயத்தங்கள் செய்யப்பட்டு வருவதை அறிந்த மக்கள் அதை எதிர்த்து போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள் யாழ் மாநகரசபையின் அனுமதியின்றி நகர அபிவிருத்தி அதிகாசபையின் நேரடி அனுமதிபெற்றே கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி இந்த பிரதேசத்தில் இத்தகைய ஒரு வர்த்தக நோக்கம் கொண்ட ஹோட்டலோ அல்லது மதுபான நிலையமோ நிறுவப்படுவதை நாம் அனுமதிக்கப்போவதில்லை என கூறினர்.

அத்துடன் காணிகள் இல்லாத நிலையில் தாம் வாழ்வதுடன் இவ்வாறான குடியிருப்பு பிரதேசத்தில் இப்படியான பாரிய நோக்கிலான வியாபார கட்டிடங்களுக்கு அனுமதி அளிப்பதனை இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தரமாக தடை செய்வதற்க்கான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டனர்.

மக்கள் பிரதிநிதிகள் வருகை

மக்களின் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் யாழ் மாநகரசபையின் உறுப்பினர்களான கே.எம்.நிலாம் எம்.எம்.எம்.நிபாஹிர் ஆகியொர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் உரிய அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அழைத்து தமது ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.

இதில் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்

யாழ்ப்பாண முஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை முழுமையாக எதிர்ப்பதாக கூறியதுடன் குளோபல் டிரேடிங் குரூப் என்னும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் ஹோட்டல் மற்றும் விடுதிக்கான கட்டிட நிர்மாணத்திற்கு எதிராக குறித்த பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தமை நியாயமானது என்றார்.

மேலும் எமது யாழ் முஸ்லிம்களுக்கு இப்பிரதேசத்தில் வேறு எங்கும் காணிகள் கிடையாது எனவும் எமது மக்களின் வறுமை நிலைமையினையும் மீள்குடியேறுவதற்கான சாத்தியப்பாடுகளற்ற நிமையினையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஒரு சிலர் முஸ்லிம் மக்களின் காணிகளை அற்ப விலைக்கு வாங்குகின்றார்கள். யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசம் யாழ் நகருக்கு அண்மித்திருக்கின்ற காரணத்தினால் இக்காணிகள் யாவும் மிகவும் பெறுமதிவாய்ந்தவையாகும் அதை எமது மக்கள் அறியாமல் தமது காணிகளை அற்பவிலைக்கு விற்று வருகின்றார்கள் அதன் விளைவுதான் இப்போது இவ்வாறு எமக்கு முன்னால் எழுந்து தாண்டவமாடுகின்றது.எனவே தான் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது அதற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த விடயத்தினை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள்யாழ் மாநகரசபை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிர்மாணப்பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி முழுமையான சட்டரீதியான விடயங்களை மீளாய்வு செய்வதாக கூறினார்.

அதற்கமைவாக உடனடியாக யாழ் மாநகரசபையின் பிரதம பொறியியலாளர் குறித்த இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டார். சட்டரீதியான ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து துரிதமாக அறிக்கையொன்றினை யாழ் மாநகரசபைக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் வழங்குவதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார். அத்தோடு நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற்படி விடயத்தில் மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கையெடுப்பதாகவும்இ அதனடிப்படையில் இவ்வனுமதியினை இரத்து செய்தல் தொடர்பில் ஆராய்வதாகவும் உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம்

யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் நட்சத்திர ஹோட்டலோ போதைப்பொருள் வியாபாரத்திற்கு நான் உயிருள்ளவரை அனுமதிக்க விடமாட்டேன் என தெரிவித்ததுடன் எமது முஸ்லீம் வட்டாரத்தில் ஜின்னா வீதியில் திடிரென நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்படும் விடயம் பாராதூரமானது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து எனது ஆதங்கத்தை கூறினேன்.அத்துடன் குறித்த ஹோட்டல் அமைக்கப்படுவது முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசம்.அது மாத்திரமன்றி பள்ளிவாசல்கள் அருகில் பல இருக்கின்றன.300 மீற்றருக்கு யாழ் ஒஸ்மானியா கல்லூரி கதிஸா பெண்கள் பாடசாலை கூட இருக்கின்றது.எனவே இவ்வாறான ஹோட்டல்கள் பொது இடங்கள் இருக்கின்ற இடங்களில் அமைக்கப்படுவது சட்டவிரோதமானது.தற்போது எமது மாநகர சபை மற்றும் எனது சக உறுப்பினர்கள் போதைப்பொருளை கட்டுப்படுத்தல் தொடர்பாக அக்கறை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறான ஹோட்டல்கள் எமது கலாச்சாரத்தை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

போரினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள எமது வாழ்வாதாரம் பாதுகாக்க என்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். இதனால் எமது பகுதியில் நட்சத்திர ஹோட்டலோ போதைப்பொருள் வியாபாரத்திற்கு நான் உயிருள்ளவரை அனுமதிக்க விடமாட்டேன் என கூற விரும்புகின்ன்றென்.தற்போது யாழ் மாநகர சபையின் கல்வி விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிலையியல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எனக்கு நிறைய பொறுப்பக்கள் இருக்கின்றது.

இதன் மூலம் யாழ் மக்களுக்கு சிறந்த கல்வித் திட்டங்களையும் இளைஞர்களுக்கான விளையாட்டுக்கான சகல வசதிகளையும் மேம்படுத்தி இதன் மூலம் பிள்ளைகளின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை தேசிய மட்டத்தில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்.குறித்த ஹோட்டல் தொடர்பாக முதலமைச்சர் யாழ் கிளிநொச்சி ஜம்மியதுல் உலமா கிளை க்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளேன். என கூறியிருந்தார்.

போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச முயற்சி

குறித்த ஹோட்டல் நிர்மாணத்திற்கு எதிராக குறித்த பகுதி மக்களே ஒன்று திரண்டு போராடினர்.போராட்டம் முடிந்ததன் பின்னர் பல முகவரி அற்ற அமைப்புகள் போராட்டத்திற்கு தாமே காரணம் என உரிமை கோரி நின்றமை இதிலும் அரசியலை புகுத்த போட்ட திட்டமாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

உலமா கிளை சபை அமைதி

யாழ். மாநகரசபையின் அனுமதியின்றி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நேரடி அனுமதிபெற்று நட்சத்திர விடுதிக்கான கட்டுமானப் பணிகள் நிர்மாணிப்பிற்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளை மௌனமாக இருந்தமை பலருக்கும் சந்தேகத்தை தோற்றுவித்தது.ஏனெனில் குறித்த ஹோட்டலை சுற்றி 4 பள்ளிவால்கள் இரு கோவில்கள் இரு பாடசாலைகள் உள்ளன.ஆனால் மக்களின் போராட்டத்தை குறித்த கிளை கவனத்தில் கொள்ளவே இல்லை.

தடுத்து நிறுத்தியது மாநகர சபை

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அண்மையாக ஹலீமா வீதியில் சகல அனுமதிகளும் பெறப்பட்டு கட்டடம் அமைக்கும் பணி இடம்பெற்று வந்த நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் சிலர் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையால் அதனை இடைநிறுத்துமாறு யாழ்ப்பாண மாநகர சபை பணித்துள்ளது.
தமிழர் ஒருவரால் அந்த இடத்தில் ஹோட்டல் கட்டப்படுவதாகத் தெரிவித்தே முஸ்லிம் அரசியல்வாதிகளும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் என குறிப்பிடப்பட்ட மனு ஒன்றும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முக்களின் மனுவில் தெரிவிக்கப்பட்டவை

யாழ்ப்பாணம் ஹலிமா வீதியில் அமைக்கப்படும் ஹோட்டலால் நெருக்கமாக வாழும் மக்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
பிற்காலத்தில் அநாச்சாரமான பழக்கவழக்கங்கள்இ மதுபோதைப் பாவனைகள் என்பன ஏற்பட்டு எமது சிறார்கள்இ இளைஞர்கள் வழிதவறிச் செல்ல வாய்ப்புக்கள் உண்டு.
அடிக்கடி நடைபெறும் களியாட்டங்களால் எழுப்பப்படும் ஒலிபெருக்கிச் சத்தத்தால்இ மாணவர்களின் கல்விஇ குறிப்பாக பரீட்சைக்குத் தயாராகுவோர்இ சிறார்கள்இ குழந்தைகள்இ முதியோர்இ நோயார்களுக்கு இடைஞ்சல் ஏற்படும்.
பாடசாலைகள்இ வணக்கஸ்தலங்கள் (பள்ளிவாசல்) மிக அருகாமையில் இருப்பதால் நற்கருமங்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு பிரச்சினைகள் உருவாகுவதற்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன.
அந்தப் பகுதி வீதி சிறு வீதியாக இருப்பதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டு அதனால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
எனவே பிள்ளைகளையும் விபரீதங்களையும் கருத்திற்கொண்டுஇ மேற்படி ஹொட்டல் அமைப்பதை நிறுத்தி உதவுமாறு கோருகின்றோம்- என்றுள்ளது.

போராட்டத்தில் ஒன்றினைந்த அரசியல்வாதிகள்

இந்தப் போராட்டத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் கே.எம். நிலாம் ( நியாஸ்) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் பங்கேற்றிருந்தனர்.
இருவரும் அரசியல் ரீதியாக கீரியும் பாம்புமாக ஒருவரை ஒருவர் போட்டி போட்டு மக்கள் சேவையில் தம்மை ஈடுபடுத்தி காட்டுபவர்கள்.
எனினும் தமிழ் ஒருவர் ஹொட்டல் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்ற விடயத்தில் எதிர்பு நடவடிக்கையில் இரவரும் மக்கள் பிரதிநிதிகளாக கைகோர்த்து நின்றனர்.

மாணவர்கள் போராட்டத்திற்கு முஸ்தீபு

யாழ் ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் இந்த ஹோட்டல் நிர்மாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(14) திங்கட்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

ஹோட்டல் நிர்மாணிக்கும் நிறுவனம் பற்றி

சம்பந்தப்பட்ட பெயரை உடைய நிறுவனம் எங்கு பதியப்பட்டதோ அவ்வாறான ஒரு நிறுவனம் இருக்கின்றதா என்பது கூட தமது விசாரணையில் அடையாளம் காண முடியாது பொலிஸார் திணருகின்றனர்.மேற்படி நிறுவன தலைவர் என்று சொல்லப்படும் நபர் கூட தற்போது தலைமறைவாகவே இருந்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக சட்டவிரோத காணி அபகரிப்பு காசோலை மோசடி வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com