சற்று முன்
Home / செய்திகள் / யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்டிற்கு கொலை மிரட்டல் – பொலிஸில் முறைப்பாடு

யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்டிற்கு கொலை மிரட்டல் – பொலிஸில் முறைப்பாடு

யாழ்.மாநகர முதல்வா் இமானுவேல் ஆனால்ட்டுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் தலமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

கம்பன் விழாவுக்குச் செல்லவேண்டாம் எனவும் தமது எச்சரிக்கையை மீறிச் சென்றால் அங்கு வைத்துக் கொலை செய்வோம் எனவும் தனக்கு அலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 15ஆம் தனது அலைபேசிக்கு அழைப்பு எடுத்த நபர், இந்தக் கொலை மிரட்டலை விடுத்தார் என்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் மாநகர முதல்வர் முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

அத்துடன், தனக்கு அழைப்பு எடுத்த தொலைபேசி இலக்கத்தையும் அவர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்தக் கொலைமிரட்டல் தொடர்பாக வடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதிபருக்கு முதல்வர் இ.ஆனல்ட் அறிவித்துள்ளார்.

மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே இந்த முறைப்பாட்டை முதல்வர் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாண மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக கேபிள் கம்பங்களை நட்ட நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தமையால் அந்த நிறுவனத்தினர் மட்டுமே தமக்கு எதிரிகளாக உள்ளனர் என்றும் முதல்வர் விசாரணையில் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com