சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் இலவசக் கண் பரிசோதனை முகாம்

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் இலவசக் கண் பரிசோதனை முகாம்

இலவசக் கண் பரிசோதனை முகாம் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் எதிர்வரும் புதன்கிழமை(12) காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் பணிமனையின் தலைவர் பி.எம் சுபியான் மௌலவி அறிவித்துள்ளார்.

இதற்கமைய இம் முகாமில் கண் பரிசோதனையின் போது கண்ணில் வெண்படலம் படர்ந்தோருக்கு இலவசமாக கண்வில்லை வைப்பதற்கான சத்திர சிகிச்சை செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கண் பார்வையில் பாதிப்புள்ள அனைவரும் தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொள்வதற்கு இச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த ஏற்பாட்டை சமூகங்களுக்கிடையே நல்லெண்ணங்களையும் நல்லுறவுகளையும் ஏற்படுத்தும் முகமாக மக்கள் பணிமனையினால் இலங்கை முஸ்லிம் வாலிபர் அமைப்பின் (AMYS) அணுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

எனவே இனமத பிரதேச வேறுபாடின்றி விரும்பும் எவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com