புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ் மேல் நீதிமன்றிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய ட்ரல் அட்பார் முறையில் குறித்த வழக்கு விசாரணை விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் நீதிபதிகளாக பா.சசிமகேந்திரன், மா.இளஞ்செளியன், அ.பிரேம்சங்கர் ஆகியோர் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவி வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 20 அம் திகதி கூட்டுப் பாலியல் வல்லுறவின் பின் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றுவந்தன. இவ் வழக்கினை கொழும்பிற்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடைவடிக்கைகள் மேற்கொண்டுவரவதாக கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. வழக்கு கொழும்பிற்கு மாற்றப்படுவதற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Home / செய்திகள் / மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் வித்தியா கொலை வழக்கு யாழிலேயே நடைபெறும்
Tagged with: கொலை மாணவி வழக்கு வித்தியா