சற்று முன்
Home / செய்திகள் / மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம் !

மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம் !

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

அவர்களின் வழக்குகளை சட்டமாஅதிபர் திணைக்களம் திடீரென அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனு அரசியல் கைதிகள் சார்பில் கடந்த செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

அதன் மீதான விசாரணை இன்று (02.02.2018) நடைபெற்ற நிலையில் வழக்கினை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com