சற்று முன்
Home / செய்திகள் / மாகாண கூட்டுறவு அமைச்சரை அழைக்காது கூட்டுறவு கூட்டமா? சுமந்திரன் எம்.பி கேள்வி !

மாகாண கூட்டுறவு அமைச்சரை அழைக்காது கூட்டுறவு கூட்டமா? சுமந்திரன் எம்.பி கேள்வி !

கூட்டுறவு பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு அதிகாரம் அது மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டத்தில் நீங்கள் ஏன் மாகாண கூட்டுறவு அமைச்சரை அழைக்கவில்லை என எனக்குப் புரியவில்லை. இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமான ஒருவராக அவர் பங்குபற்றியிருக்கவேண்டும். பாராளுமன்றத்திலும் கூட்டுறவுச் சட்டம் உள்ளது அதையும் நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் மத்திய கூட்டுறவு அமைச்சரிற்கு இல்லை. மாகாண அமைச்சரிற்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது இந்நிலையில் நீங்கள் ஏன் அவரை அழைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டுறவு தொடர்பில் அதிகாரகளுடன் இன்று (18) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர்,

மத்திய பாராளுமன்றில் நிறைவேற்ற ப்பட்ட கூட்டுறவு அதிகாரங்களை பிரயோகிப்பது மாகாண அமைச்சரே. மகாணத்திற்கு சரியான அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை எனச் சொல்கிறார்கள். அவ்வாறு சாட்டுச் சொல்லக்கூடிய சூழ்நிலையில் நாங்களும் ஏதாவது செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால் அது வெகு விரைவில் மாறப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் எனக் கூறிக்கொள்ளும் நாங்கள் அது பகிரப்படாமல் இருப்பது மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.

எனவே கூட்டுறவுச் சங்கங்கள் மாகாண கூட்டுறவு அமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடன் கூடுதலான நெருக்கத்துடன் பணியாற்றவேண்டும் எனவும் அதில் ஏதாவது கஷ்ரங்கள் இருப்பின் குறிப்பிடுமாறும் தெரிவித்தார்.

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com