திருகோணமலை டொக்யாட் மெதடிஸ்த திருச்சபை வாலிபர் சங்கத்தினரின் முயற்சியில் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ பாடல்கள் இசை இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 28.12.2016 அன்று திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரி கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. “மணம் மாறா பாமலர்கள்” என பெயரிடப்பட்டுள்ள இவ்விறுவட்டு தற்கால கிறிஸ்தவ வழிபாடுகளில் அரிதாக பயன்படுத்தப்படும் இனிய அர்த்தம் பொதிந்த பாடல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு பரிச்சயப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும்.
இந்நிகழ்வு திருகோணமலை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைக்குரு அருட்திரு சுஜிதர் சிவநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட திரு திருமதி மனோலூயிஸ் அவர்கள் இவ் இசை இறுவட்டினை வெளியீட்டு வைத்தனர்.
இப்பாடல் இறுவட்டிக்கான இசையை திரு. அ. ஜெ. கனீசியஸ் வழங்கியுள்ளார். பாடல்களை திரு .கி. சுதன் திரு. ச. சபேஷ்குமார் மற்றும் திரு. க. பார்த்தீபன் ஆகியோர் பாடியுள்ளனர்.
Tagged with: facebook google hirufm jaffna jobs youtube யாழ்ப்பாணம் வாகீசம்