சற்று முன்
Home / செய்திகள் / மட்டக்களப்பில் இரட்டை கொலை! – தீபாவளியை சோகத்தில் மூழ்கடித்தது

மட்டக்களப்பில் இரட்டை கொலை! – தீபாவளியை சோகத்தில் மூழ்கடித்தது

மட்டக்களப்பு ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளன.

தாயும் மகனும் வீட்டில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர் இளம் தாயெனவும் கணவன் வெளியூரில் வசிப்பதாகவும் தெரிய வருகின்றது.

இச் சம்பம் இரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார் சம்பம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிளவிலேயே தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.

கழுத்தறுத்துக் கொலை செய்யபட்டவர்கள் ராஜா மதுவந்தி 26 வயதெனவும் மதுசன் வயது 11 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி தினமான இன்று இக் கொடூரச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் அப் பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com