சற்று முன்
Home / செய்திகள் / மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு !!

மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு !!

நாடு பூராகவும் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது.

இன்று காலை ஆரம்பித்த வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமுகமான சூழலில் நடைபெற்றுவருவதை காணமுடிவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள நிலையில் சுமுகமான முறையில் விறுவிறுப்பாக வாக்களிப்பு நடைபெற்று வருகின்றன.

இன்றுகாலை 10 மணி வரையான வாக்களிப்பு நிலவரப்படி கம்பஹா, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 30% வாக்குப் பதிவும், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 25% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர நுவரெலியா, பொலன்னறுவை, பதுளை, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 20% வாக்குப் பதிவும், வவுனியா மாவட்டத்தில் 40% வாக்குப் பதிவும் காலி மாவட்டத்தில் 19% வாக்குப் பதிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுவதுடன், இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com