சற்று முன்
Home / செய்திகள் / பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பிரதேச சபைத் தவிசாளரின் உறுப்புரிமை நீக்கம்

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பிரதேச சபைத் தவிசாளரின் உறுப்புரிமை நீக்கம்

எம்பிலிபிட்டிய பிரதேச சபை தவிசாளர், எம்.கே. அமில என்பவர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அவர், தேர்தல் ஆணைக்குழுவினால் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், எம்பிலிபிட்டிய பிரதேச சபை தலைவர் எம்.கே. அமிலவுக்கு, கடந்த வருடம் ஜூலை 17ஆம் திகதி, மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, அவர் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com