வடக்கு மாகாணசபையின் 92 ஆவது அமர்வின்போது பட்டதாரிகள் வாயிற் கதவுகளைப் பூட்டி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று நடைபெற்ற 93 ஆவது அமர்வில் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டதாரிகள் வாயிற்கதவுகளைப் பூட்டியதால் 92 ஆவது அமர்வில் தான் பங்குபற்ற முடியவில்லை. அப்போது மாகாணசபை என்ன நடவடிக்கை எடுத்தது என உறுப்பினர்அனந்தி சசிதரன் அவையில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்தபோதே அவைத்தலைவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் வாயிற் கதவுகளை மூடி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.