நீண்டகாலமாக புனரமைக்கப்பட்டாமல் இருந்த நீர்வேலி குறுக்கு வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ப
கடந்த ஆட்சியின் ஐ-றோட் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த வீதியை புனரமைப்பு செய்ய இணக்கம் காணப்பட்டது. இதன்படி இவ் வீதியானது நீர்வேலி சந்தியில் இருந்து அச்செழு மூன்று சந்தி இணையும் 4.33 கி.மீற்றர் வரை காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.
சீன நிறுவனம் ஒன்று இந்த புனரமைப்பு வேலைகளை இன்று ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது