சற்று முன்
Home / செய்திகள் / நல்லூர் துப்பாக்கிச்சூடு – சந்தேக நபருக்கு விளக்கமறியல்

நல்லூர் துப்பாக்கிச்சூடு – சந்தேக நபருக்கு விளக்கமறியல்

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சரணடைந்த நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் உத்தரவு இட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் குறித்த நபரை இன்று மாலை யாழ்.போலீசார் முற்படுத்திய போது அவரை 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு இட்டார்.

இன்றைய தினம் குறித்த சந்தேக நபர் பதுங்கி இருந்த இடத்திற்கும் அவரை அழைத்து சென்ற போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர்.

அதேவேளை பொலிஸ் விசாரணையில் தன்னுடைய மச்சான் (ஏற்கனவே கைதான நபர்) பொலிசாரின் (நீதிபதியின் மெய்பாதுகாவலர் ) துப்பாக்கியை பறிக்க முடியுமா என சவால் விட்டார் எனவும் அதனாலையே பறித்ததாகவும் அதன் போது அது தவறுதலாக வெடித்து விட்டது என வாக்கு மூலம் அளித்து இருந்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com