நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேசநபர் இன்று காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவரது பெயர் செல்வராசா ஜயந்தன் (39) என்றும் இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான பொலிஸ் அத்தியேட்சகர் ருவான் குணசேகர இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் கடந்த 22ம் திகதி பொலிஸ் சாஜன் ஒருவரை துப்பாக்கியினால் சுட்டுக்கொலை செய்து மேலும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டு காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் சற்று முன்னர் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
———————————————————————————–
#நல்லூர், சூட்டு சம்பவம், பிரதான சந்தேகநபர், #யாழ், #பொலிஸ் நிலையத்தில், #சரண்,
#nallur, #jaffna, #lka, #sl,