தையிட்டியில் விடுவிக்கப்பட்டது துறைமுகப் பிரதேசம் அல்ல அது வெறும் கடற்பிரதேசமே ஆனால் அரசு மீனவரிகளிற்காக துறைமுகப் பிதேசத்தை விடுவித்ததாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. துறைமுகப் பிரதேசம் மயிலிட்டியிலேயே உள்ளது. அதனை அரசு விடுவிக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவர்கள் தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,
நாங்கள் இந்திய இழுவை மடிப் படகுகளை நடைசெய்யக்கோரி போராட்டம் நடாத்தி வெற்றி பெற்றிருக்கிறோம்’ ஆனால் உள்ளுரில் இழுவை மடிப் படகு மீன்பிடி மிக மோசமாக நடைபெறுகின்றது அதனை தடுக்க வேண்டும். தீவக மீனவர்கள் எதிர்நோக்கும் பிச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். இவற்றை வலியுறுத்தி அரச அதிபர் மற்றும் நாடாருமன்ற உறுப்பினர்களிற்கு மகஜர் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.