(31.07.2015) யாழ். சாவகச்சேரி நகரில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் நால்வர் இன்று நண்பகலில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீதிக்குப் புறம்பான முறையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதால் குறித்த நால்வரையும் கைதுசெய்ததாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் தமிழ் தேசிய முன்னணியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் செல்வராஜா கஜேந்திரனின் ஆதரவாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.