சற்று முன்
Home / பிரதான செய்திகள் / தலைமையின் மிரட்டல்களை மீறி தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்துப் போராட்டத்தில் பங்கேற்பு

தலைமையின் மிரட்டல்களை மீறி தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்துப் போராட்டத்தில் பங்கேற்பு

சர்வதேச விசாரணை கோரி நடாத்தப்பட்டுவரும் கைஎழுத்துப்போராட்டத்தினை இலங்கை தமிழ்அரசுக் கட்சியின் தலைமைகள் விமர்சித்தும் கேலிசெய்தும் வருவதோடு தமது கட்சிப் பிரதிநிதிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டம் எனவும் கூறிவரும் நிலையில் தமக்கு எதிரான தடைகளையும் பொருட்படுத்தாது யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி தென்மராட்சி அமைப்பாளர்
திரு.அருந்தவபாலன் கையெழுத்து போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். 
சாவகச்சேரி நகரின் முன்னெடுக்கப்படும்
கையெழுத்து வேட்டையில் அவர் இணைந்துள்ளார்.
அதேவேளை மன்னார் மாவட்டத்தில் ஆரம்பமான கையெழுத்து போராட்டத்தில் வடமாகாண அமைச்சர் பொ. டெனிஸ்வரன், இலங்கை
தமிழ் அரசு கட்சி இளையோர் அணி செயலார் சிவகரன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
கட்சியில் தமது கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொள்வதாகக்கூறி வடக்கு முதல்வருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழரசுக்கட்சி மிரட்டிவரும் நிலையில் சர்வதேச விசாரணை வலியுறுத்திய கைஎழுத்துப் போராட்டத்திற்கு தமிழரசுக்கட்சிப் பிரதிதிகள் துணிவுடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com