சித்தரை புத்தாண்டை மகிழ்விக்கும் முகமாக லிந்துலை பொலிஸார் மற்றும் நாகசேனை கிராம சேவகர் பிரிவில் உள்ள பெசிபன், அகரகந்தை ஆகிய தோட்டங்களில் அதிரடி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வசந்தகால புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
16.04.2016 மற்றும் 17.04.2016 அன்று ஆகிய இரு தினங்களில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் சருக்கு மரம், தலையணை அடித்தல், சட்டி உடைத்தல், ஓட்டப்போட்டி, நீச்சல் ஓட்டப்போட்டி, தேங்காய் துருவுதல் உட்பட பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.