மட்டக்களப்பில் கடந்த 15.11.2017 அன்று காலமான ஈழத்தின் மூத்த ஊடகவியலாளரும், ஈழநாடு, ஈழநாதம், தினக்கதிர் போன்ற நாளிதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவருமான எஸ்எம்ஜி, கோபு என் அழைக்கப்படும் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று 24.12.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
யாழ். சரஸ்வதி மண்டபத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வை, யாழ். ஊடய அமையம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகத்துறை முன்னோடிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் பலரும் பங்கேற்று, மறைந்த கோபு ஐயா அவர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.