சற்று முன்
Home / செய்திகள் / “கைது அச்சம்” – பூஜிதவும் ஹேமசிறியும் வைத்தியசாலையில் ஒளிந்துகொண்டனர் !!!

“கைது அச்சம்” – பூஜிதவும் ஹேமசிறியும் வைத்தியசாலையில் ஒளிந்துகொண்டனர் !!!

இன்று சி ஐ டி அலுவலகத்திற்கு வருமாறு கேட்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர , பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளாரென தெரிகிறது. பெரும்பாலும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படலாமென தெரிகிறது .

இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஹேமசிறியும் ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோரை இன்று காலை பத்தரை மணிக்கு சி ஐ டி தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் சுகயீனம் காரணம் எனக் கூறி சில கடந்த சில நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ஹேமசிறி தங்கியிருக்கிறார்.

இந்நிலையில் பூஜித்த ஜயசுந்தரவும் பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளாரென தெரிகிறது.

இதற்கிடையில் ஹேமசிறி பெர்னாண்டோ கைதாகும் பட்சத்தில் அவர் யாரும் எதிர்பாராத முக்கியமான தகவல்களை வெளியிடுவாரென அவருடன் தொடர்புடைய தரப்புக்கள் கூறின.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com