திருகோணமலை, கிண்ணியா, மணலாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களின் 4 டிப்பர்களும் 4 உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்