தம்மால் பெற்றுக்கொள்ளப்படுகின்ற காணாமல் போனவர்களின் உறவினர்களின் சாட்சியங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம அங்கு அதற்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் அவ்வமை சினூடாக முன்னெடுக்கப்படும் என்றார்.
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. அமர்வின் பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே, பரணகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.