சற்று முன்
Home / செய்திகள் / காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி உட்பட 700 ஏக்கர் காணி கையளிப்பு

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி உட்பட 700 ஏக்கர் காணி கையளிப்பு

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகியன மாட்சிமை தங்கிய ஜனாதிபதி அவர்களால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் 12.03.2016 சனிக்கிழமை நடைபெற்றது.

 வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடேஸ்வராக் கல்லூரியின் காணிப்பத்திரம் மற்றும் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களின் காணிப் பத்திரங்களை வழங்கினார்.
 நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோட் கூரே, அமைச்சர் விஜயகலா மனேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அரசஅதிபர், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com