‘கருவி’ மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையத்தின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது. நிலையத்தின் தலைவர் திரு க.தர்மசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.
அதன்போது, கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் உறுப்பினர்களுக்கான உதவிகள் வழங்கல் நிகழ்வும் நடைபெற்றது.