யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
ஆசிரியராகத் தொழில் புரியும் 30 வயதினையுடைய குறித்த பெண்ணிற்கு சத்திர சிகிச்சை மூலமே இவ்வாறு நான்கு குழந்தைகளும் பிறந்துள்ளன. குறித்த சத்திர சிகிச்சையினை மகப்பேற்று நிபுணர் சுரேஸ்குமார் மேற்கொண்டார்.
இவ்வாறு சத்திர சிகிச்சை மூலம் பிறந்த நான்கு குழந்தைகளுமே பெண் குழந்தைகளாகும்.
இதேநேரம் இந்த மாதம் 2ம் திகதியும் கட்டுவனைச் சேர்ந்த ஓர் பெண்ணிற்கு 4 குழந்தைகள் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.