சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / எல்ஜீன் ஓயாவில் குப்பைகளை கொட்டுவதனால் நீர் மாசடைகின்றது – மக்கள் விசனம்

எல்ஜீன் ஓயாவில் குப்பைகளை கொட்டுவதனால் நீர் மாசடைகின்றது – மக்கள் விசனம்

நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள லிந்துலை மெராயா நகரத்தில் சேகரிக்கபடும் குப்பைகளை மெராயா நகரத்தினை அண்மித்து காணப்படும் பகுதியில் கொட்டப்படுகின்றது. இங்கு கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் எல்ஜீன் ஓயா கிளை ஆற்றில் கலக்கப்படுவதால் ஆற்று நீர் மாசடைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும் இந்த ஆற்று நீரையே பயன் படுத்துகின்றனர். இதன் காரணமாக தாம் சுகாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நகரத்தில் சேர்க்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை பாதை ஓரத்தில் கொட்டப்படுவதாலும் அதனை பறவைகள், நாய்கள் இழுப்பதால் அப்பகுதி சுகாதார நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசப்படுவதுடன், நுளம்பு தொல்லையும் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல தடவைகள் அதிகாரிகளிடம் கூறியபோதும் இதுவரை எவரும் கவனத்திற்கு எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே நுவரெலியா பிரதேசசபை அதிகாரிகள் நகரத்தின் சுகாதார நடவடிக்கையை கருத்தில் கொண்டு குப்பைகளை முறையான இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com