சற்று முன்
Home / செய்திகள் / எதிர்ப்புக்களை மீறி பொருத்து வீடுகட்ட முனைப்புக் காட்டும் – ரணில் அரசு

எதிர்ப்புக்களை மீறி பொருத்து வீடுகட்ட முனைப்புக் காட்டும் – ரணில் அரசு

வடக்கிற்கான பொருத்து வீடுகளை தமிழ் தரப்பின் கடும் எதிர்ப்புக்களிற்கு மத்தியினிலும் எவ்வாறேனும் தலையினில் கட்டியடித்துவிட ரணில் அரசு மும்முரம் காட்டிவருகின்றது.

இவ் நிலையில் நேற்று திங்கட்கிழமை ரணில் அமைச்சரவை அமைச்சர்களான ரவி கருணாநாயக்கா மற்றும் டி.எம.சுவாமிநாதன் ஆகியோர் உலங்கு வானூர்தி மூலம் யாழ். குடாநாட்டிற்கு திடீர் பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் கோப்பாய் , தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி பொருத்து வீடுகளையும் அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

குறித்த பொருத்து வீட்டுத்திட்டமானது அமைப்பதற்கு 21 லட்சம் ரூபாவில் திட்டம் தயார் செய்யப்பட்டு பின்னர் 16 லட்சம் ரூபாவாக மாற்றம் செய்யப்பட்டு அப் பெறுமதியில் 10 ஆயிரம் வீடுகள் அமைக்க முயற்சிகள் இடம்பெறுகின்றது. நாடாளுமன்றில் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட போதும் ரணில் அரசு அதனை கருத்தினில் எடுத்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு ஏதுவாக நிதி ஒதுக்கீட்டினை விடுவிக்க ஏதுவாகவே நிதி அமைச்சர் வருகை தந்து திரும்பியிருப்பதாக கூறப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com