பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மேலும் எட்டு அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக 31 அரசியல் கைதிகளுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 24 பேர் பிணை ஒப்பந்தங்கள் பூர்த்தியான நிலையில் சிறைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.
இதன்படி மொத்தமாக 39 அரசியல் கைதிகளுக்கு இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.