சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சிறுவனை பேருந்து மோதியதில் ஸ்தலத்தில் சிறுவன் பலியாயுள்ளான். ஊர்காவற்றுறை பாலக்காட்டுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற இச்சசம்பவத்தினால் அப்பகுதியில் சிலமணி நேரம் பதட்டமான சூழல் நிலவியது. அங்கு கூடிய பொதுமக்கள் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி வன்முறையில் இறங்கினார்கள். உடனடியாகவே அப்பிரதேசத்தில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பலியாகிய சிறுவன் ஊர்காவற்றுறைப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவனான ஜெயக்குமார் அகிலன் (16) என தெரியவருகின்றது.