உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவாக சுப்பிரமணியம் பூங்காவுக்கு அருகில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் சிறியதந்தையார் லோகநாதன் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஆகியோர் இணைந்து 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தனர்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாவினை வெட்டி நினைவுத் தூபியினை திறந்துவைத்ததோடு, நினைவுத் தூபியில் தனது முதற் கை ஒப்பத்தினை இட்டார்.
‘பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றிணையும் ஒற்றுமைப் பயணம். வாருங்கள் ஒன்றாய் சுவாசிக்க’ என்னும் கருப்பொருளில் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், யாழ்.ஊடக அமையம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து மேற்கொண்ட வடக்கு, தெற்கு ஊடகவியலாளர் இணைப்பு நிகழ்வின் ஓர் அங்கமாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.