இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போனோரின் எண்ணிக்கை 109 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 57 ஆயிரத்து 505 மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 109 ஆகும் என்றும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
366 நலன்புரி முகாம்களில் 74 ஆயிரத்து 928 பேர் தங்கியிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.