சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / ஆபாச காணொளிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த ஆசிரியர்

ஆபாச காணொளிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த ஆசிரியர்

பன்னிபிட்டிய பகுதியில் வசிக்கும் ஆசிரியர் சிறுவர்களுடைய ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து வெளிநாடுகளிலுள்ள சிலருக்கு விற்பனை செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த 54 வயதுடைய ஆங்கில மொழி ஆசிரியர், திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு, 2012ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஆசிரியரின் வீட்டிலிருந்து பெருந்தொகையான உள்ளாடைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு, சிறுவர்களின் ஆபாச காணொளிகள் அடங்கிய 130 காணொளிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு இலக்கான 3 சிறுவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, சந்தேகநபரால் சிறுவர்களுக்கு ட்ரோன் கெமரா பரிசளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com