முறையான அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பயணிகள் பஸ்களுக்கான அபராதத் தொகை இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை, ரூபா 10,000 ஆக அறவிடப்பட்டுவந்த குறித்த அபராத தொகையையே இவ்வாறு அதிகரித்துள்ளதாக அமைச்சரவை சம பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார்.
இன்று (23) இடமபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை அறிவித்தார்.