சற்று முன்
Home / செய்திகள் / அநியாய விலையில் தேங்காய் விற்பனை

அநியாய விலையில் தேங்காய் விற்பனை

கொடிகாமம் சந்தையில்   85 ரூபாக்கும் அதிகமான விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுகின்றது என மக்கள் விசனம் தெரிவித்தாக  எமது செய்தியாளர்  தெரிவித்தார்.
இது தொடர்பாக எமது செய்தியாளர் கருத்து தெரிவிக்கையில் ,

கடந்த 2017.12.06 ஆம் திகதிய 2048/30 இலக்க அரச வர்த்தமானிய அறிவித்தலின் பிரகாரம் தேங்காய் ஒன்றின் விலையாக ரூபா 75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஆகவே இச்சில்லறை விலைக்கு மேலதிகமாக உற்பத்தியாளர், இறக்குமதியாளர், பொதிசெய்பவர் விநியோகஸ்தர் அல்லது வியாபாரி எவரும் விற்பனை செய்யவோ, விற்பனைக்கு விடவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் கட்டளையின்படி தெரியப்படுத்தப்பட்டுள்ளது என அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதும் இதனை எந்தவொரு வர்த்தகர்களும் கடைப்பிடிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

சகல வர்த்தகர்களும் பின்பற்றுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்திருந்தும் இவ்வாறாக அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்யப்படுகின்றது எனவும் விலைஜை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கடும்  விசனம் தெரிவித்துவருவதாக  மேலும்  தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com