வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டொக்டர் ராஜிதசேனாரட்ன இதுதொடர்பாக தெரிவிக்கையில் காணாமற்போனோரின் எண்ணிக்கை 111 மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 95 என்றும் கூறினார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
11,2565 குடும்பங்களைச்சேர்ந்த 43,8295 பேர் இருப்பிடங்களை இழந்துள்ளனர்.முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 250, ஓரளவுக்கு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 1785, பாதிக்கப்பட்ட 24735 குடும்பங்கள் 339 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.