சற்று முன்
Home / செய்திகள் / விருந்துக்குச் சென்றவர் சடலமாக மீட்பு !

விருந்துக்குச் சென்றவர் சடலமாக மீட்பு !

புத்தள, ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 122ம் கட்டை அருகிலிருந்து சடலம் ஒன்றை பொலிஸ் நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

ஒக்கம்பிட்டிய பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சமன் அநுரகுமார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (06) இரவு விருந்துபசாரம் ஒன்றிற்கு சென்று கெப் வாகனம் ஒன்றில் மீண்டும் வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில் வாகனத்தில் இருந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் சடலம் ஒக்கம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று (07) நடைபெற உள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com