வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதாக செய்தி வெளியிட்டுள்ள கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றின் தமிழ்ப்பிரிவு அவரால் வெளியிடப்பட்ட இனவாதக் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று தென்மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு,
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவாதக் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் எதிர்ப்பு வெளியிட்டும், தென்மாகாண சபையில் இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தென்மாகாண சபை கே.ஏ. சோமவன்ச தலைமையில் கூடியது.
இதன்போது மாகாண சபை உறுப்பினர் ஷம்லி விதானாச்சி குறித்த யோசனை முன்வைக்கப்பட்டு, மாகாண சபை உறுப்பினர் அசோக தனவன்சவினால் பிரேரிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றுள்ளது.