(17.08.2015) இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு வன்முறைகள் ஏதுமற்று மிக அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. யாழ் குடாநாட்டில் யாழ் நகர்ப்பகுதியில் வாக்களிப்பு குறைவாகக் காணப்படுகின்றபோதும் வலிகாமம் வடக்கு, வடமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகளவில் வாக்களிப்பு நிலையங்களை நோக்கிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.