வலிவடக்கில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வியாழக்கிழமை (07) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதன்போது வலி வடக்கு மீள்குடியேற்றத் தலைவர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் ஆகியோரிடம் நீண்ட நேரம் உரையாடிய அவர் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய உடனடி வேலைத்திட்டங்கள் பற்றி கேட்டறிந்துகொண்டார்.