இலங்கை வந்துள்ள யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் திருமதி எரினா பொக்கோவாவிற்கும் நாட்டின் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று(16) இடம்பெறவுள்ளது.
அமைச்சர் சுசில் பிறேம ஜயந்த தலைமையில் தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் விஞ்ஞான ரீதியான செயற்றிட்டங்கள் குறித்து திருமதி எரினா பொக்கோவா தெளிவுபடுத்தவுள்ளார்.
இந்தச் செயற்றிட்டங்களுக்காக இலங்கை விஞ்ஞானிகளின் அறிவையும் பங்களிப்பையும் பெற்றுக்கொள்வது குறித்து அங்கு கலந்துரையாடப்படவுள்ளது