யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடற்படை சிப்பாய்க்கு கொரோனா.
கடற்படை சிப்பாய் ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வீடு திரும்பிய நிலையில் மீள கடமைக்கு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த கடற்படை சிப்பாய் யாழ்ப்பாணத்திற்கு கடமைக்க வந்த நிலையில் அண்மையில் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையின் 7 இலக்க நோயாளிகள் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கடற்படை சிப்பாய் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த விடுதியில் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்டவர்களை தனிமைப்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.