(27.09.2015) யாழ் போதனா வைத்தியசாலையின் பணி்ப்பாளராக வைத்தியா் த.சத்தியமூர்த்தி நியமனம் பெற்றுள்ளார்.
இறுதி யுத்தத்தின் மிகவும் நெருக்கடியான காலத்தில் ஆபத்தான சூழலில் உயிரையும் பொருட்படுத்தாது மருத்துவப் பணியாற்றிய இவர்
2009 புதுமாத்தளன் பாடசாலையில் கிளிநொச்சி மருத்துவமனை இயங்கிய போது தனது கைகளில் இருந்த ஒருசிலவகை மருந்துகைளை வைத்துக்கொண்டு நூற்றுக்கணகான காயப்பட்டவா்களுக்கு மருந்து கட்டுதல், சத்திரசிகிசை மேற்கொள்ளுதல், ஏனைய நோய்களுக்கு வருகின்றவா்களுக்கு சிகிசை வழங்குதல் என சிறப்பாக பணியாற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.