யாழ்ப்பாணம் நகர் இராசாவின் தோட்டம் வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது அந்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்கென யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.